தவமும் தவம் கிடக்க
கிடைக்கப் பெறாத வரம் நீ...
மழை சாரலும் தமிழ்
பாடலும் ஈன்ற கருப்பு தீ!
பாறை மீது மயிலிடும்
முட்டையாய் உன் கருத்துக்கள்...
அதை உருட்டி விளையாடும்
மந்தியாய் என் கவிதைகள் !
செம்மொழியாலும் விவரிக்க முடியா
அறுபது ஆண்டு இளைஞனே...
எம்மொழியும் உன் கை
பட ஏங்கும் கலைஞனே !
தங்க பாதம் பூமி
தொட்ட இந்நாளை ...
தமிழ் கவிதைகளின் காதலர்
தினமாகவே கொண்டாடுகிறோம்!
" வைரமுத்து அவர்களுக்கு ...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !."
No comments :
Post a Comment