Monday 28 July 2014

Vazhthu madal..

தவமும் தவம் கிடக்க
கிடைக்கப் பெறாத வரம் நீ...
மழை சாரலும் தமிழ்
பாடலும் ஈன்ற கருப்பு தீ!

பாறை மீது மயிலிடும்
முட்டையாய் உன் கருத்துக்கள்...
அதை உருட்டி விளையாடும்
மந்தியாய் என் கவிதைகள் !

செம்மொழியாலும் விவரிக்க முடியா
அறுபது ஆண்டு இளைஞனே...
எம்மொழியும் உன் கை
பட ஏங்கும் கலைஞனே !

தங்க பாதம் பூமி
தொட்ட இந்நாளை ...
தமிழ் கவிதைகளின் காதலர்
தினமாகவே கொண்டாடுகிறோம்!

" வைரமுத்து அவர்களுக்கு ...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !."

No comments :

Post a Comment