Monday 28 July 2014

நிமிர்ந்து நில்

#நிமிர்ந்து #நில்!#

இருபதாயிரம் ஆண்டிற்கு முன் பிறந்த
பழம்பெரும் ஒரு மொழி ...
எம் மொழிக்கும் தாய்மொழியாம் எம்மை
பெற்ற செம்மொழி !

என்ன தவம் செய்தாயோ தமிழா
நீ தமிழனாய் பிறப்பதற்கு...
ஆனால் தமிழ் இன்னும் செய்கிறது
தவம் உன்நாவில் பிறப்பதற்கு !

அண்டம் கண்ட முதல் மனிதன்
மற தமிழன் அல்லவா...
அயர்ந்து விழித்ததும் அறிவிக்கும் முதல்
வார்த்தையே ஆங்கிலம் அல்லவா !

பெற்ற தாயை மறந்திடுவாயோ குடித்த
பாலை குமட்டிடுவாயோ..
பின் தாய்மொழியை மட்டும் மறந்து
பிறமொழியோடு கலந்து குலைத்ததேனோ!

தமிழ் அசிங்கமல்ல அது உன்
தொப்புள் கொடி அடையாளம் ...
தமிழனென்று சொல்லடா தமிழா...
தலை நிமிர்ந்து நில்லடா!

_#ஜெ#

No comments :

Post a Comment